நிலவே என்றேன்

நிலவே என்றேன்
ஒளிந்ததாய்

பூவே என்றேன்
உதிர்ந்தாய்

மேகமே என்றேன்
கடந்தாய்

கடலே என்றேன்
கரித்தாய்

அன்பே என்றேன்
ஏசினாய்

அமுதே என்றேன்
விஷமானாய்

நிஜமே என்றேன்
கசந்தாய்

நிழலே என்றேன்
மறைந்தாய்

உறவே என்றேன்
மறந்தாய்

உயிரே என்றேன்
பிரிந்தாய்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக