காதல் சாட்சி

மறையும் வானவில்
மழையின் சாட்சி

பொங்கும் பெருங்கடல்

பொர்ணமியின் சாட்சி

கண்ணோக்கும் கவிதைகள்

காதலின் சாட்சி

அழுகின்ற நெஞ்சம்

அன்பின் சாட்சி

விரியும் தாமரை

விடியலின் சாட்சி

மலரும் மல்லி

மாலையின் சாட்சி

அலறும் அல்லி

அர்த்தராத்திரியின் சாட்சி

என் ஜீவன் ஜீவிப்பது

உன் உயிரின்  சாட்சி..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக